தொடர்புடைய கட்டுரை


தானாகவே குணமாகும் நோய்கள்

Dr.V. செல்வராஜ்

19th Jan 2019

A   A   A

மனித உடலானது இரத்தம், தசை, நரம்புகள், எலும்புகள் போன்றவற்றோடு உள்ளுறுப்புகளையும், வெளியுறுப்புகளையும் உள்ளடக்கிய அமைப்பாகும். செயல்பாட்டிற்காக அமைக்கப் பெற்ற திசுக்களின் தொகுப்பையும் பெற்றுள்ளன.  முதன்மை திசுக்கள், இடையிட்ட திசுக்கள் என இருவகைப் பட்ட திசுக்கள் உள்ளன.

குறிப்பிட்ட உறுப்புத் தொடர்பில் தனித்துவமானவை முதன்மைத் திசுக்களாகும்.  உதாரணமாக இதயத்தின் முதன்மைத் திசு இதயத்தசையாகும். இதயத்தில் உள்ள இரத்தம், நரம்பு இவை இடையிட்ட திசுக்களாகும்.

அதோடு உணவுப் பாதையின் நீளம் ஏறக்குறைய எட்டு மீட்டர்கள். உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 75 டிரில்லியன். இதுபோன்ற பல உள்ளன. மொத்தத்தில் நமது உடல் ஓரு பெரிய தொழிற்சாலை போல அந்தந்த உறுப்புகள் அதனதன் வேலையை திறம்பட செய்துவருகிறது.

இப்படிப்பட்ட இந்த செயல்பாடுகள் முடக்கப்படும் போது நோய்கள் உருவாகின்றன.  மேலும் நம் உடலில் உருவாகின்ற நோய்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான நோய்கள் அனைத்தும் தானே குணமாகிவிடுகிறது என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.  மருத்துவம் பயில்கின்ற மருத்துவர்களுக்கு 70% நோய்களுக்கு மருத்துவமே தேவையில்லை… தானாகவே சரியாகிவிடும் என்பது தெரியாது.

மக்களுக்கும் தெரியாது. ஏன் தெரியாது... பல காரணங்கள் இருக்கிறது.  இன்றைய சூழலில்... மருத்துவம் வணிகமயமாகி விட்டது. மக்களின் அவசரம் வலி எதாவது வந்தால் உடனே அந்த வலி போகனும்னு அவசரம், நோயினைப் பற்றிய பயம் என மூன்று காரணங்களும் முக்கியமானது.

வந்த நோய் தானாகவே சரியாக நாம் அனுமதிப்பதும் இல்லை.  மருத்துவம் செய்து சரி செய்யலாம் என்றால் நாம் உடனடியாக ஆங்கில மருத்துவதைத் நாடிச் செல்கிறோம்.  அது பலவிதமான விளைவுகளை உடலில் ஏற்படுத்துகிறது.

காய்ச்சல் என்பது ஒரு முதல்தரமான நோய் எதிர்ப்பு செயல்பாடு, என்று மருத்துவ புத்தகத்தில் போட்டு விட்டு, இங்கு காய்ச்சலுக்கு மருத்துவம் செய்ய ஆண்டிபையாட்டிக் மருந்து கொடுத்து கொண்டிருக்காங்க நமது மருத்துவர்கள்.  106 டிகிரிக்குப் போனா ஆபத்துன்னு சொல்லுவாங்க. அப்போ 100, 101 டிகிரி நோயாளிகளுக்கு குளிர்ந்த நீர் ஒத்தடம் பண்ணச் சொல்லிவிட்டு சாப்பிடும் உணவு சொல்லி அனுப்பலாமே... அப்படி செய்ய மாட்டாங்க. மருந்து கொடுப்பாங்க.

அது டப்புன்னு வியர்வையை செயற்கையாக வரவைத்து சோலிய முடிச்சிரும். நோய் எதிர்ப்பு செயல்பாடு என்று சொல்வதெல்லாம் முடிவுக்கு வந்துவிடும். உடல் வெப்ப ஒழுங்குமுறை மய்யத்தில் வெப்ப சமன்பாட்டை குறைத்துவிட்டுடும். வீக்கம் என்பது திசுக் காயத்திலிருந்து நுண்ணுயிர்களை வெளியேற்ற உடல் மேற்கொள்ளும் ஒரு தற்காப்பு செயல்முறை ஆகும் என்று சொல்லிட்டு அதை உடனடியாக நிறுத்திட ஆன்டிபயாட்டிக், வலிநிவாரணிகள், ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளாக பரிந்துரை பண்ணியிருப்பாங்க.

ஏதாவது அடிபட்டா 10 நாள் சும்மா விட்டாலே தானாக சரியாகப் போயிரும்னு சின்ன வயசுலேயே நமக்குத் தெரியும். ஆனா கட்டுப்போட்டு ஊசி போட்டாதான் சரியாகுமுன்னு நம்மள நம்ப வைச்சு, அதுக்கும் மருத்துவரை பார்க்க டோக்கன் வாங்கி நிற்க வைப்பது வழக்கமாகி விட்டது.

இரத்த அழுத்தம் அதிகமாவதற்கு உடலியல் தேவைகளை, திருப்திபடுத்தண்ணு படிச்சிருக்கோம். அது நார்மலுக்கு கொண்டுவர உடலுக்குள் அழுத்த உணர்வி, வேதிய உணர்வி, ஹார்மோன்கள்ன்னு பல விசயமிருக்கு.  அது தேவைக்கேற்ப நரம்புகளை சுருங்கச் செய்தல், விரியச் செய்தல்ன்னு செயல்பட்டு சரிசெய்துக் கொள்ளும். ஆனா டாக்டர் அதுக்குள் புகுந்து கால்சிய வழிப்பாதையை அடைப்பதாய் சொல்லி உடலின் மொத்த இயக்கத்தையும் கெடுத்து விட்டுருவாங்க.

கேன்சரை தடுக்க கூட உடம்புல பாதுகாப்பு அமைப்பு இருக்கு.  P53 என்கிற ஜெனட்டிக், செல்லோட தேவையற்ற செல் பெருக்கத்தை தடுக்கும்.  மருந்து மாத்திரைகள் அது ஏன் இயங்குநிலையில் இல்லை, அதை எப்படி இயங்க செய்வது என்று பார்க்காமல் வெளியே இருந்து கெமிக்கல் விளைவை உண்டு பண்ணி நல்லா இருக்கும் செல் மற்றும் மரபணுவை சிதைத்து விட்டுட்டு போயிரும்.

உடம்பில் ஏற்படும் வலிகள் மறைய நமது உடலில் பாதுகாப்பளிக்கும் அமைப்பு இருக்குண்ணு உடற்கூறியல் நூல் சொல்லுது. வலி சரியாக உடலிலேயே வலியகற்றல் அமைப்பு இருக்கு. நுளைவு கட்டுப்பாட்டு இயங்குமுறை மூலமா ஹார்மோன்களை சுரந்து வலியை கொஞ்ச நேரத்துல குறைச்சிடும். ஆனா மருத்துவர்கள் எண்ட்ரோபைன், நியூரோடென்ஷனை எல்லாம் எப்படி சுரக்க வைக்கிறதுன்னு யோசிக்காமா நரம்பு ரூட்டிற்கு உணர்ச்சி வேகத்தை கடத்தாம இருக்க வேதிப்பொருளை வலிநிவாரணியா அனுப்பிருவாங்க. அப்போ உடலின் நிலை மோசமாகும்.

அடுத்ததாக தூக்கம். செரொடொனின், கபா ன்னு ஹார்மோன்கள் தூங்குறதுக்குண்ணு இயற்கையா உடல்ல சுரக்கும். அதப்பத்தியெல்லாம், அக்கரையில்லாம தூக்கத்திற்கும் தூக்க மாத்திரை கொடுக்குறாங்க. இது என்ன வேலை செய்யுது... நாம தூங்கும் போது மூளையோட வேலை குறைஞ்சிரும்.  அப்படிண்ணா மூளையோட வேலையை வேகம் குறைச்சிட்டா தூங்குனா மாதிரி ஆயிடுமில்ல. அதனால CNS ஐ மெதுவா பண்ணுறதுக்கு தூக்க மாத்திரை கண்டுபிடிச்சிருக்காங்க நம்ம விஞ்ஞானிகள். சீப்ப ஒழிச்சு வைச்சுட்டா கல்யாணம் நின்னு போயிரும்ன மாதிரி.

இப்படி உடம்புல எல்லா தீர்வுகளும், உடம்புக்குள்ள இருக்கு. அது தெரியாம தொற்றுக்கெல்லாம் நாம் பயப்படுகிறோம். பாக்டீரியா, வைரஸ் எல்லாம் நமக்கு   உயிரியல் தடுப்பூசியாக செயல்படுது. ஆனா நம்ம அதத்தேடித் தேடி ஆன்டிபயாட்டிக் போட்டு கொன்னுக்கிட்டு இருக்கோம்.

அல்சருக்கு மருந்து எடுக்கும்போது உடலில் உள்ள லேக்டோபேசில்லஸ், அசிடோபிலாஸ், இகோலி எச். பைலொரி, எல்லாம் சாகுது.  எனவே மனிதர்களை மருந்து பார்த்தா குணப்படுத்த முடியாது. 

10 நாட்கள் சமாளிக்கலாம். 11வது நாள் எதிர்வினை நடக்கும். நாம் நினைப்பது போல நம் உடம்பு சகஜ நிலைக்கு திரும்பாது என்று மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வகுப்பு நடத்தும் போது சொல்லி மருத்துவ மாணவர்களுக்கு வியப்பு ஏற்படுத்தினர்.

70% நோய்கள் தானாக சரியாகி விடும்னு மக்களிடம் சொன்னா நாம பிழைப்பு நடத்த முடியாதுன்னும் சொன்னார். பசித்தால் சாப்பிடு, தாகத்திற்கு தண்ணீர், தேவைப்பட்டால் ஓய்வு, இரவு 10 மணிக்கு தூங்க வேண்டும். மனது சமநிலை, அமைதி, சிறிதளவு உடற்பயிற்சி இவற்றை தினமும் செய்துவந்தால் இது இயற்கையான வாழ்க்கை முறையாக மாறிவிடும். அப்படி செய்யும்போது மருத்துவர் தேவையில்லை.  எல்லா நோயும் தானாகவே சரியாகிவிடும். நோய் ஏற்பட்டால் அதை சரிசெய்ய உடம்புல தேவையான அனைத்து பொருட்களும் இருக்கு.

தேவைப்பட்டால் மருந்தில்லா மருத்துவ முறைகளை எடுத்துக் கொள்ளலாம்.  நம்மை பாதுகாப்பதற்கு ஆங்கில மருத்துவ முறைகளை தவிர்ப்போம். உடலைப் பேணுவோம். நலமுடன் வாழ்வோம்....

 


ஜனவரி 2018 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.