தொடர்புடைய கட்டுரை


காய்கள் தரும் பயன்கள்

Dr.V. செல்வராஜ்

06th Jul 2019

A   A   A

அண்மைக்காலத்தில் மக்களிடம் உணவு தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்காக பல இயற்கை சார்ந்த உணவுகளை உண்ண துவங்கியுள்ளர்கள். வேதிஉரங்கள் பயன்படுத்தாத உணவுப் பொருட்கள், குறிப்பாக காய்கறிகள் வாங்கி உபயோகிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதன் பிரதிபலிப்பாக (ஆர்கானிக்) இயற்கை உரங்கள் பயன்படுத்தி விளைவித்த பொருட்கள் விற்பனை அங்காடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இங்கு காய்கறிகள் வந்தவுடன் அனைத்தும் விற்பனையாகி விடும் நிலை இன்று காணப்படுகிறது. காய்கறிகளோடு பழங்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாது சிறுதானிய உணவு வகைகளும் இன்று அதிகம் விற்கப்படுகிறது. அதிகமாக சிறுதானியங்களை பயன்படுத்துகிறார்கள். சிறுதானியங்கள் என்று சொன்னாலே போதும் அந்த கடைகளில் அனைத்து சிறுதானியங்களையும் எடுத்து தந்துவிடுவார்கள்.

இப்படியாக மக்கள் வாழ்வில் இயற்கை உணவுகள் சமைக்காது காய்களை உண்ணும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. பச்சை காய்கறிகளை உணவுடன் சேர்த்து கொள்கிறார்கள். இயற்கை மருத்துவர்களும் சமைக்காத உணவுகளை பச்சையாய் உண்ண வலியுறுத்துகிறார்கள்.

இதன்மூலம் உணவில் உள்ள வைட்டமின் மற்றும் சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைக்கிறது. மருத்துவர்களும் அதிகமாக காய்கறிகளும் கீரைகளும் சாப்பிடும்படி அறிவுறுத்துகிறார்கள்.

மனித சமுதாயத்தை ஆட்டுவிக்கிற நோய்களை காய்கறிகள் மூலம் கட்டுப்படுத்திட இயலும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். நீண்ட நாட்களாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள, பல வருடங்களாக தொடர்ந்து சிகிட்சை எடுத்தும் குணமாகாத இரத்த அழுத்தத்தை குணப்படுத்த முடியுமா என்றால் முடியும், அதுவும் எளிய முறையில் என்கிறார்கள்.

அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெண்டைக்காய் தான் என்பது ஆச்சரியமானது தான். வெண்டைக்காய் மூன்றை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அதனை எடுத்து சாப்பிட வேண்டும். மூன்று நேரமும் இதுபோல் சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது சுவைத்து சாப்பிட வேண்டும்.

வெண்டைக்காயில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் கே யும், கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் அதிகமாக உள்ளது. வயிற்றுபொருமல், தசைபிடிப்பு, மலச்சிக்கல், வாயுதொல்லை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றை நீக்கும் சக்தி வெண்டைக்காய்க்கு உண்டு.

வெண்டைக்காய் துண்டுகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அந்நீரை பருக நீரழிவு நோய், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். மலச்சிக்கலிலிருந்து விடுதலை பெறலாம். எலும்புகள் வலுவடைந்து ஆஸ்டியோ போரோசிஸ் பிரச்சனை தடுக்கப்படும். சுவாச பிரச்சனை, உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி, இதய நோய்கள் கட்டுப்படுத்தல், கொலஸ்ட்ரால், நீரழிவு நோய்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடலில் துவர்ப்பு சக்தி குறைவது தான் காரணம். இதய பிரச்சனை இதயம் சுருங்கி விரிய துவர்ப்பு சுவையை உடலில் கூட்ட வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். துவர்ப்பு சுவைக்கு வாழைமரம் சிறந்த உணவாகும். வாழைக்காயை தோலுடன் எடுத்து நறுக்கி, தேங்காய் மற்றும் தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். இதய நோய் பிரச்சனைகள் படிப்படியாக மறைந்துவிடும். நல்ல சுகம் கிடைக்கும்.

வாழைக்காயில் கொழுப்பு 0.3 கிராம், சோடியம் 1 கிராம், கார்போஹைட்ரேட் 23 கிராம், நார்ச்சத்து 2.6 கிராம், சர்க்கரை 12 கிராம், புரதம் 1.1 கிராம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே உள்ளது. கனிமங்களில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது. மாவு சத்து அதிகம் இருப்பதால் வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது.

உடலில் புற்றுநோய் பாதிப்புகள் இன்று அதிகரித்து வருகிறது. புற்று நோய் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உடலில் பாஸ்வர சத்து அதிகம் உள்ளது. இந்த பாஸ்வர சத்து நாம் சாப்பிடும் புளிப்பு உணவுகளால் வெளியேறிகொண்டே இருக்கிறது. இப்போது நமது உடல் அமிலத்தன்மை உள்ளதாய் மாறுகிறது. உடலில் உள்ள புளிப்பு சுவையை இரண்டு மூன்று நாட்களுக்குள் மாற்ற வேண்டும்.

அதற்கு சிறந்த மருந்து வெள்ளைப் பூசனிக்காயை தோலுடன் மிக்சியில் போட்டு அடித்து சாப்பிட வேண்டும். இதன்மூலம் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

பூசனிக்காயை சமைத்து சாப்பிடும்போது நரம்பு சம்பந்தமான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண், மேகவேட்டை குறையும்.

உடலில் சூட்டை தணித்து, சிறுநீரக நோய்களை குணப்படுத்துகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரழிவு, வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவற்றையும் நீக்க பயன்படுகிறது.

உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள் குணப்படுத்தவும் வெண்பூசனி பயன்படுகிறது.

இதயம் பலவீனமாக உள்ளவர்கள் வெண்பூசணியின் சாறு 30 மில்லி அளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் பலமாகிறது.

பூசணிக்காய் சாறு 120 மி.லிட்டர் அளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டுவர சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் குணமடையும்.

பூசணிக்காய் சாறுடன் சிறிது கற்கண்டு சேர்த்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர கல்லீரல் பாதிப்பு, மஞ்சள்காமாலை நோய்கள் குணமாகும்.

அண்மைக் காலத்தில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இரத்த சுத்திகரிப்பு (டையாலிசிஸ்) செய்து வாழும் முறை வந்துள்ளது. இரத்தத்தில் நீர் அசுத்தங்கள் சரியாக பிரியவில்லை, உடலில் நெஞ்சு, தலை, வயிறு, காலில் கூட நீர் போட்டிருக்கலாம். இவற்றை வெளியேற்றும் சக்தி கத்தரிக்காய்க்கு உண்டு.

உடலில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு இரண்டு கத்தரிக்காய் மற்றும் இரண்டு தக்காளியை எடுத்து அரைமணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து அதனை மிக்ஸியில் அடித்து வடித்து குடித்துவர சிறுநீர் பிரியும்.

சிறுநீரக கோளாறுகள் வராது. இரத்தத்தில் யூரிக் அமிலம், கிரியேட்டின் அளவு குறையும். இதற்கு செலவு செய்வதோ குறைவு, கிடைக்கும் பலனோ அதிகம் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

மனிதர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆட்படும்போது பல நோய்கள் வருகிறது. மன அழுத்தத்தினால் நரம்புகள் பலவீனம், தலைவலி, பக்கவலி, பக்கவாதம், இரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, மூட்டுவலி என உடலில் வரும் பல நோய்களுக்கு அடிப்படையாக மன அழுத்தம் அமைந்து விடுகிறது.

நரம்புத்தளர்ச்சிக்கு பத்து கொத்தவரங்காயும் ஒரு முழு எலுமிச்சையும் எடுத்து சாறாக்கி குடித்துவர நல்ல மருந்தாகும். பெண்களுக்கு மன அழுத்தத்தினால் உடலில் தெரியும் பிரச்சனைகள் இதனை குடித்துவர நலம் பெரும். மன அழுத்தத்திற்கான மூல காரணத்தையும் கண்டறிய வேண்டும். அப்போதுதான் முழுமையான நலம்பெற முடியும்.

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் வளர கொத்தவரங்காய் நல்ல உணவாகும்.

வலுவிழந்த எலும்புகளுக்கு நல்ல வலுவூட்டவும், பல் கூச்சம், பற்களில் வலி, பற்சிதைவு போன்ற கோளாறுகளுக்கு நல்ல தீர்வு தருகிறது. இதனை சாப்பிட்டுவர புற்றுநோய் உருவாகும் செல்கள் நம் உடலில் வளராது தடுக்கிறது.

கொத்தவரங்காய் புரதங்கள் நிறைந்த நார்ச்சத்து உணவு. இதில் வைட்டமின் கே, சி, ஏ, கார்போஹைட்ரேட் மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் கொழுப்புக்கள் உள்ளது.

இதனை உண்ணும்போது உடலில் குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது. இதன் மூலம் நீரழிவுநோய் தடுக்கப்படுகிறது. பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் இதயநோய் அபாயத்தை குறைக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம் அதிக அளவு இருப்பதால் எலும்புகளை வலுவாக்குகிறது.

இயற்கையாக கிடைக்கும் இந்த காய்களால் ஏராளம் பலன்கள் நமக்கு கிடைக்கிறது. இதனை பயன்படுத்துவோம், நலமோடு வாழ்வோம்.

 


டிசம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.