அடையாறில் இருந்து சில அதிர்ச்சி தரும் செய்திகள்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

21st Aug 2018

A   A   A

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நம்மிடையே மிக வேகமாக பரவிவரும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய் ஆகும். உலகப்புகழ்பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நடத்திய சமீபத்திய சில ஆய்வு முடிவுகள் நமக்கு அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண் ஆடம்பரங்களுக்கு செலவழிக்கும் இன்றைய தலைமுறையினரின் உணவுப் பழக்கங்கள் இந்த நோய் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். நமது உணவுப்பழக்கங்கள் எவ்வாறு நம்மை புற்றுநோயை நோக்கி இழுத்துச் செல்கின்றது என்பதை இந்த ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு புலபடுத்துகிறது.

உப்பு போட்டதும், புகைப்பதால் உருவாக்கப்படும் உணவுப்பொருள்களை எடுத்துக்கொள்வதால் நைட்செமின் என்ற ரசாயனப்பொருள் புற்றுநோய்க்கு காரணமாகிறதுஇறைச்சி வீணாகாமல் பாதுகாப்பதற்காக சேர்க்கப்படும் சில வேதிப்பொருள்கள் புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறதுஉணவில் அதிக அளவு விலங்கு கொழுப்பு அடங்கியிருந்தால் புற்றுநோய் வரும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மார்பகங்களிலும், குடலிலும்தான் இத்தகைய புற்றுநோய் வருகிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றனவறுத்த, பொரித்த உணவுப்பொருள்களால் புற்றுநோய் ஏற்படும். சமீபகாலமாக பிரபலமாகிவரும் விரைவு உணவுகள் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஒரே எண்ணையை பாத்திரத்தில் பல நாள்களாக மாற்றாமல் சூடாக்கி மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் அதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய செல்கள் உருவாவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை ஆய்வு முடிவுகள் இந்த ஒரு விஷயத்தை பற்றி தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளதுஉப்பு போட்ட, மற்றும் புகைத்தல் மூலம் உருவாக்கப்படும் உணவுப்பொருள்களில் நைட்சமின் என்ற ரசாயனப்பொருள் அடங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கிறது

உணவுப்பொருள்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் நைட்ரோசமினாக மாறிவிடுகின்றன. தானியங்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும், காய்கறிகள், பழங்கள் மற்றும் இலை காய்கறிகள் ஆகியவை விளைச்சலின்போது வீணாகாமல் இருப்பதற்காகவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்களின் அளவு அதிகமாவதால் அவை நம் உயிருக்கே உலை வைத்துவிடுவதாக அமைந்துவிடுகின்றன. அதனால் இவற்றை எல்லாம் நன்றாக ஓடும் நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். நிலக்கடலையில் ஏற்படும் பூஞ்சை புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறதுபுற்றுநோய் ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்கப்படும் உணவுப்பொருள்களில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள், வாசனைக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள், செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை ஆகும்

இதேசமயம் உண்ணும் உணவை சரியானமுறையில் திட்டமிட்டு உண்பதால் புற்றுநோயை வராமலும் தடுக்கமுடியும் என்று அடையாறு ஆராய்ச்சி மையம் கூறுகிறது. புற்றுநோய் பற்றிய பல ஆய்வுகளும் வலியுறுத்தி கூறுவது தாராளமாக காய்கறிகளையும், பழங்களையும், நார் சத்துள்ள உணவுப்பொருள்களையும் சேர்த்து கொள்வதும், வைட்டமின் , சி, ஆகியவை அடங்கியுள்ள பொருள்களை தாராளமாக அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதும் புற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்பாற்றலை நமக்கு தருகிறது என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறங்கள் உடைய பழங்களில் அடங்கியிருக்கும் பீட்டா கரோட்டின் புற்றுநோய்க்கு எதிராக வினைபுரியும் ஒரு வலிமை பொருந்திய பொருளாகும். ஏறக்குறைய 5 மில்லிகிராம் பீட்டா கரோட்டின் உணவில் வழக்கமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்

நமக்கு பழக்கமான கீரை, பப்பாளி, காரட், சர்க்கரைவல்லிக்கிழங்கு, முருங்கக்கீரையின் இலை, முட்டைகோஸ், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் புற்றுநோயை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் ரசாயனங்களுடைய செயல்திறனை இவை குறைத்துவிடும்..

முட்டைகோஸ், காலிப்ளவர் ஆகியவை இரைப்பையில் உண்டாகும் புற்றுநோயையும், மார்பக புற்றுநோயையும் வராமல் தடுக்கவல்லவை ஆகும்தேங்காய் எண்ணையில் உள்ள கந்தகத்தை அடிப்படையாக கொண்ட பொருள்கள் மார்பக புற்றுநோயையும், குடல் புற்றுநோயையும் வராமல் தடுக்கும் வலிமை பெற்றவை ஆகும். சோயாவும், எள்ளும் புற்றுநோயை வரவழைக்க கூடிய சூழ்நிலையை வெற்றி காணும் என்று கருதப்படுகிறது. காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மனித உடலுக்குள் வந்தவுடன் ரெக்டினோயிக் அமிலமாக மாறும். இது புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் ஒரு அற்புத மருந்தாகும்

வெங்காயத்திலும், பூண்டிலும் இருக்கும் மசாலா பொருள்கள் இரைப்பை, குடல், சுவாச உறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கு காரணமான கிருமிகளை தடை செய்கிறது என கண்டறியப்பட்டுள்ளது

முட்டைகோஸ், காலிப்ளவர் ஆகியவை இரைப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவை வராமல் தடுக்கிறது. வெள்ளைப்பூண்டில் உள்ள கந்தக அடிப்படையிலான வேதிப்பொருள்கள் மார்பக புற்றுநோயையும், குடல் புற்றுநோயையும், இரைப்பை புற்றுநோயையும் வராமல் தடுக்கும் ஆற்றல் பெற்றவை ஆகும். சோயா எப்போதும் புற்றுநோய்க்கு காரணமான ரசாயனங்களை உருவாகாமல் தடுக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளதுஎள்ளுக்கும் இந்த திறன் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. தக்காளியில் இருக்கும் லைசோபின் என்னும் சிகப்பு நிறத்தில் உள்ள வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கிறது

மிகவும் ஆச்சரியம் தரும் ஒரு விஷயம் கோதுமைத் தவிடை சாப்பிட்டால் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்கள் காலப்போக்கில் சுருங்கி கடைசியில் மறைந்துபோய்விடுகின்றன என்பதாகும். நம்முடைய நாட்டில் சுலபமாக கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் போன்றவை இதுபோன்ற ஆய்வுகளுக்கு உட்படுத்தும்போதுதான் அவற்றில் இருக்கும் அற்புதமான நோயை தடுக்கும் சத்துகள் பற்றி நமக்கு தெரியவருகிறதுசரியான உணவுமுறையால் புற்றுநோயை வராமல் தடுக்கமுடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில உணவுகளும், சில சமையல் முறைகளும் நோய் வருவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றன என்பதும் தெரியவருகிறது. சில உணவுகளே நோயையும் கட்டுப்படுத்தி, கடைசியில் இல்லாமலும் செய்துவிடுகின்றன. அதனால் எப்போதும் ருசிக்காக உணவு உட்கொள்ளாமல் உடல் நலத்துக்காகவும், சுகமான, ஆரோக்கியமான வாழ்வுக்கும் உணவு உட்கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க முயலவேண்டும்.

 


ஆகஸ்ட் 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.