தொடர்புடைய கட்டுரை


கேப்மல்லிகை மரம் (Cape jasmine)

Dr. பா. சாம்ராஜ்

20th Jun 2018

A   A   A

கேப்மல்லிகை என்றும் டீக்காமல்லி என்றும் அழைக்கப்படும் இந்த குறுமரத்தின் தாயகம் ஜப்பான் மற்றும் சீனப்பகுதிகள் என்று கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் இது பன்னீர் மரம் என்றழைக்கப்படுகிறது. வடமாநிலங்களில் ஹிந்தியிலும், வங்காளியிலும், ஒரியாவிலும் இதனை கந்தராஜ் என்றழைக்கிறார்கள். பன்னீர் மரங்களை நறுக்குகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.

டீக்காமல்லி மருத்துவ குணம் வாய்ந்திருப்பதால் நம் நாட்டின் தோட்டங்கள் பலவற்றிலும் பயிரிடுகிறார்கள். டீக்காமல்லியின் சில இனங்கள் காடுகளில் வளர்கின்றன. சுமார் 15 அடி உயரம் வரையிலும் வளருகின்றது. சிறிய பசுமை குன்றாத மரம். சில இடங்களில் இது ஒரு பெரிய புதர்ச்செடியாகவும் காணப்படுதல் உண்டு. இதன் இலைகள் மிகப்பெரியவை. பளபளப்பானவை. நீள்வட்ட முட்டை வடிவில் தடித்தவை. அரிதாக புள்ளிகளும் கோடுகளும் காணப்படுதல் உண்டு. தனிமலர்கள் சுமார் 3 அங்குல விட்டமுடையவை. மஞ்சள் கலந்த வெண்மையானவை. இரட்டை மலர்கள் ஏராளம். மூக்கை ஈர்க்கும் வாசனையுடையவை.  இதன் பழம் சுமார் ஒன்றரை அங்குலம் நீளமுடையவை. ஆரஞ்சு நிறமுடையது.

டீக்காமல்லியில் காணப்படும் மருத்துவ குணங்களாவன... டீக்காமல்லிப்பட்டை ஒரு சிறந்த வலி அகற்றியாகவும் (Antispasmodic), முறைக்காய்ச்சல் அகற்றியாகவும் (Antiperiodic), எருஇளக்கியாகவும் (Laxative), புழுக்கொல்லியாகவும் (Vermifuge) செயல்படுகிறது. இது இந்திய மருத்துவத்தில் ஒரு தலைசிறந்த அழுக்கு அகற்றி (Antiseptic). இதன் வேரை அஜீரணத்துக்கும் நரம்பு நோய்க்கும் பயன்படுத்துகின்றனர். இலைகளை குடிநீரில் இட்டு ஒரு வெப்ப அகற்றியாக பயன்படுத்துகின்றனர். இலைகள் குளிர் காலத்தில் ‘மானிட்டால்’ (Mannitol) என்ற சத்தை கொண்டுள்ளன. ஆனால் கோடைகாலத்தில் இச்சத்து இருப்பதில்லை.

கனிகள் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்ப ஊட்டியாகவும் செயல்படுகின்றன. எனவே காமாலையிலும், பிருக்கநோய்களிலும் பயன்படுத்துகின்றனர். கனிகளில் பெக்டின், டேனின் மற்றும் க்ரோசின் (Crocin) என்ற சத்தும் காணப்படுகின்றன. பூக்களில் காணப்படும் மணம் Styrene acetate என்ற பொருளால் உண்டாகிறது. சீன நாட்டில் டீக்காமல்லி மலரை தேயிலைக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

டீக்காமல்லியின் பட்டையிலிருந்து தற்காலத்தில் சக்தி வாய்ந்த ஆன்டிஹிஸ்டமின் (Antihistamine) சத்து தயாரிப்பதற்காக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இச்சத்துக்கள் பெருமளவில் வெளிநாட்டு மருந்துகள் இந்தியாவில் இறக்குமதியாவதைத் தவிர்த்து நமது வெளிநாட்டுச் செலவாணியை கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படுத்தியுள்ளன. டீக்காமல்லியின் சத்து எஃரிலிக் கார்சினோமாப் புற்றுகளைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்பதை ஜப்பானில் யூகேகி என்பவர் நடத்தியுள்ள ஆராய்ச்சிகள் மூலமாக நிரூபித்துள்ளார்.

தமிழ்நாட்டின் டீக்காமல்லியின் நெருங்கிய இனங்களான பெருங்குப்பை (Gardenia latifolia), கும்பிப்பிசின் அல்லது தலைவலிப்பிசின் (Gardenia gummiera), மலாக்கரை (Gardenia turgida) போன்ற இனங்கள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன. இத்தாவரங்களின் பட்டைகளிலும் புற்றுநோயை ஆற்றும் சத்துக்கள் உள்ளனவா என்பதை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

 


மார்ச் 2016 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.